200அமைப்புகள் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்கக்கூடாது என தெரிவித்து போலிஅறிக்கைகளை வெளியிட்டுள்ளது -அரசாங்கம் தகவல்
Read Time:1 Minute, 18 Second
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்ககூடாது என்ற நோக்கத்தில் சுமார் 200அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது உள்நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் பல இரகசியமான முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செனல் 4காணொலி உண்மையாதென உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க நிறுவனமொன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது. மேலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் நபர்கள் மின்அஞ்சல் மூலம் இலங்கைக்கு வரிச்சலுகையை வழங்ககூடாதெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் மேலும் குறித்த நபர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating