தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகள் வழங்கப் போவதாக ரஷ்யா தெரிவிப்பு
இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என ரஷ்யா உறுதிமொழி வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அலெசி பொரட்விக்கின் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கும் அலசிபொரட்விக்கிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவிவரும் மரபுரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யா அதிக முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் எவ்வாறான துறைகளில் முதலீடு செய்யமுடியும் என தாம் ஆலோசிப்பதாகவும் ரஷ்ய பிரதிவெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating