அராலி வடக்கு சுரேஸ்குமார் மற்றும் கரவேப்பங்குளம் நிசாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Read Time:1 Minute, 17 Second
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மயிலம்புலம் அராலி வடக்கை சேர்ந்த 32வயதான துரைசாமி சுரேஸ்குமார் என்பவர் கடந்த 10ம் திகதி, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளார் இதனை தவிர, வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் கரவேப்பங்குளத்தை சேர்ந்த 21வயதான தங்கராஜா நிசாந்தன் என்பவர், விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் இந்த கைதுகள் தொடர்பாக, மக்கள் கண்காணிப்புக்குழுவிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் இவர்கள் இருவரும், வேலைவாய்ப்புக்காக சென்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில், சுரேஸ்குமார் பூசாமுகாமிலும், நிசாந்தன், பயங்கரவாத தடுப்புபிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating