வெள்ளவத்தையில் பெண்ணொருவரின் கைப்பையைக் கொள்ளையடித்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்
Read Time:1 Minute, 17 Second
கொழும்பு, வெள்ளவத்தையில் பெண்ணொருவரின் கைப்பையைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் எதிர்வரும் நவம்பர்மாதம் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .இவர் கல்கிசை நீதிமன்ற மேலதிக நீதவான் ரிஷ்டன் டெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர், குறித்த பெண்ணின் கைப்பையைக் கொள்ளை அடித்துச் சென்றவேளையில், பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். குறித்த அமைச்சரினால் பிணையில் விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் நீதவான் அதனை மறுத்துள்ளார். குறித்த சந்தேகநபர் ஈ.பி.டி.பி அமைப்பைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating