மாத்தறை வைத்தியசாலையிலிருந்து குதித்து பெண் தற்கொலை
Read Time:56 Second
மாத்தறைப் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் வைத்து இன்று அதிகாலை பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating