சீனாவில் விமானம் விழுந்து நொறுங்கி 40 ராணுவ வீரர்கள் பலி
சீனாவில் 40 பேருடன் பறந்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அத்தனைபேரும் பலியானார்கள்.சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அன்கூய் மாநிலத்தில் ராணுவத்தின் போக்குவரத்து விமானம் பறந்தபோது அது திடீர் என்று விழுந்து நொறுங்கியது. மலைச்சரிவில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் இருந்த 40 பேரும் பலியானார்கள்.
யாவோகன் என்ற கிராமத்தில் மாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து பற்றி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,
“விபத்து நடந்த இடத்தில் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக்கிடந்தன. உடல் பாகங்கள் மலைச்சரிவு முழுவதும் சிதறிக்கிடந்தன” என்று தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.