ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக தெரிவித்து கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5சந்தேகநபர் மீது தீவிர விசாரணை

Read Time:1 Minute, 26 Second

கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் இருவர் உட்பட சுமார் 7பேர் இவ்வாரு கைது செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையின் பின் 2தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு பின்னர் இந்த ஐவரும் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம் கல்கிஸ்ஸை நீதிமன்றில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வந்தபோதிலும் தற்போது இவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவில் அடிப்படையிலேயே இவர்களை கைது செய்ததாக பாதுகாப்பு தரப்பினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் -வாசுதேவ நாணயக்கார
Next post உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதில்லையென தமிழ் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவிப்பு