தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம்

Read Time:1 Minute, 31 Second

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் நிலையில் தமிழ்நாடு இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் உள்ளிட்ட தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்ப ஆர்வம் காட்டுவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன. இவர்கள் தமிழக அரசிடமிருந்து நிதியுதவிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் இவர்களுக்கான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் குடும்பங்களாக உள்ளவர்களை மாத்திரமே உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு அனுப்புவதற்கான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. தனிப்பட்டவர்களாக அகதிகளாக சென்றவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க உதவுவது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படுமென்றும் உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை அகதிகள் பலர் பல மாதங்களாகவும் வருடங்களாகவும் தமிழக கியூ பிரிவினரின் அனுமதிக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதில்லையென தமிழ் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவிப்பு
Next post 76பேருடன் கனடா சென்றடைந்துள்ள ஓசியன்லேடி என்கிற கப்பல் புலிகளுடையது..