தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம்
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் நிலையில் தமிழ்நாடு இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் உள்ளிட்ட தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்ப ஆர்வம் காட்டுவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன. இவர்கள் தமிழக அரசிடமிருந்து நிதியுதவிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் இவர்களுக்கான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் குடும்பங்களாக உள்ளவர்களை மாத்திரமே உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு அனுப்புவதற்கான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. தனிப்பட்டவர்களாக அகதிகளாக சென்றவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க உதவுவது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படுமென்றும் உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை அகதிகள் பலர் பல மாதங்களாகவும் வருடங்களாகவும் தமிழக கியூ பிரிவினரின் அனுமதிக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating