கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் தொகுதிதொகுதியாக அழைத்துச்செல்லப்பட்டு பாடசாலைகளில் தங்கவைப்பு

Read Time:2 Minute, 3 Second

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொகுதிதொகுதியாக அழைத்துச்செல்லப்பட்டு அங்குள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மல்லாவி மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தமது வீடுகளுக்குச் சென்று துப்புரவுசெய்யும் பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களில் மற்றும் ஒருசாரார் இன்று அழைத்துச் செல்லப்பட்டு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் பகல் நேரத்தில் தமது வீடுகளுக்கு சென்று துப்புரவுசெய்யும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவில் பாடசாலைகளிலே தங் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தமது வீடுகளை புனரமைக்கவும், தேவையான பொருள்களை கொள்வனவு செய்யவும் வசதியாக 25,000 ரூபா ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படுகின்றது. அந்தப் பிரதேச அரச அதிகாரிகள் அந்த மக்களின் தேவைகளை மதிப்பீடுசெய்து உதவிகளை வழங்கி வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 400கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை புலிகள் இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர் -இந்திய ஊடகம் தெரிவிப்பு
Next post சர்வதேச கடனட்டை சூத்திரதாரி “கனடா உமேஸ்” சென்னையில் கைது