இலங்கைமீது தடைகள் விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்யவேண்டும் -பசுமைக் கட்சி
Read Time:1 Minute, 17 Second
இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதம்குறித்து கவலைகள் இருக்கும் நேரத்தில் இலங்கைமீது தடைகள் விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்யவேண்டும் என்று அவுஸ்திரேலிய பசுமை கட்சியின் தலைவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் இலங்கையைவிட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதை தடுக்க வேண்டுமானால் மேலதிகமான நடவடிக்கை தேவையாக இருப்பதாக பசுமை கட்சியின் தலைவர் பாப் பிரவுன் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் பின்னர் தஞ்சம் கோரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 75க்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பலை அவுஸ்திரேலிய கடற்படை மீட்டு இருந்தது.
Average Rating