விடுதலைப்புலி உறுப்பினர்களின் 12பேர் மாவோய்ஸ்டுகளுக்கு பயிற்சியளிக்க இந்தியா சென்றுள்ளனர் -இந்திய ஊடகம்
நக்சலைட்டுகள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதம் பெறுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்தியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதி காடுகளில் பயிற்சி எடுத்ததற்கு கூட்டங்கள் கூடியதற்குமான சான்றுகளையும் மத்திய புலனாய்வுத் துறையினர் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் மாவோயிஸ்டுகள் புலிகளிடமிருந்து பயிற்சி பெற்றதற்கு போதிய சான்றுகள் கிடைத்துள்ளன என்றார். ஆந்திர பிரதேசம் தமிழ்நாடு சட்டீஸ்கார் மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களுக்குள் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் இருக்கும் என மத்திய புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததாகவும் இப்போதைய தகவல்களின்படி நன்கு பயிற்சிபெற்ற 12விடுதலைப்புலி உறுப்பினர்கள் அண்மையில் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது அவர்கள் மூன்றுக்குழுக்களாக பிரிந்து கேரளா ஊடாக ஆந்திராவின் வசகடற்கரையை அடைந்துள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் மாவோஸ்டுகளுக்கு பயிற்சியளித்து இந்திய படைகளை தாக்குமாறு செய்வதோடு தாம் இலங்கையில் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்காக இலங்கை வடமாகாணத்திலுள்ள துரப்புகளை தாக்குதவற்கான செயற்பாட்டுத் தளமாக தென்னிந்தியாவை பாவிக்ககூடும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Average Rating