அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராஜரட்னத்திடம் விசாரணை செய்ய இலங்கைக்குழு அமெரிக்கா செல்ல தீர்மானம்
Read Time:1 Minute, 25 Second
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையை சேர்ந்த காவல்துறை குழுவொன்று அனுப்பி வைக்கப்படலாம் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடத்தும் பொருட்டு இந்தகுழு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ராஜரட்னம் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட நபர்கள் விடுதலைப்புலிகளுக்கு தொடர்ச்சியாக நிதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளுடனான நிதிகொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்த அமெரிக்கா இலங்கை காவல்துறையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளக்கூடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை ராஜரட்னத்தின் இலங்கை சொத்து விபரங்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating