தென்மாகாணசபை உறுப்பினர்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் வழங்கப்படவுள்ளது
அண்மையில் இடம்பெற்றுமுடிந்த தென்மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது தென்மாகாணசபை தேர்தல் முடிவுகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக பதவிப்பிரமாண நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் பதவிப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன முதலமைச்சராக காலி மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குளை பெற்றுக்கொண்ட ஷான் விஜேலால் டி சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலிமாவட்டத்தில் ஒரு அமைச்சரும் மாத்தறை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்களும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு அமைச்சரும் நியமிக்கப்படவுள்ளனர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டு மூன்றாவது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட நிசாந்த முத்துஹெட்டிகம ஏற்படுத்திய சர்ச்சைகளின் காரணமாக பதவிபிரமாண நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating