இலங்கைப் பிரஜை ஒருவர் இத்தாலியில் மரணம்
Read Time:57 Second
இலங்கைப் பிரஜை ஒருவர் இத்தாலியில் மரணமடைந்துள்ளதாக றோமில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்களுக்கான பிரிவுக்கு அறிவித்துள்ளது. சாம்சன் சுரேந்திரன் பெனடிக்ட் என்பவரே இறந்துள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 21.02.1918ம் ஆண்டு பிறந்துள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இறந்தவரின் உரித்தாளர்களை பற்றியோ அல்லது இறந்தவர் பற்றிய தகவல்களைக் கொடுக்கக் கூடியவர்கள் வெளிநாட்டமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கங்கள், 011-2437635, 011-2473899 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating