புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய மாணிக்கவாசகன் கனடாவில் கைது
புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த மாணிக்கவாசகன் என்பவர் கனேடிய புலனாய்வுப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகன் என அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு ஜீ.ஜீ.எவ் உபகரணங்கைளும், செயற்கைக்கோள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய நூறு தொலைத் தொடர்பு கருவிகளையும் வழங்கியதாக கூறப்படுகின்றது. முன்னதாக இக்கருவிகளை தனது பிரயாணப் பைக்குள் மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என்று கூறப்படும் அந்தேரினிப்பிள்ளை ஜெயராஜ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
One thought on “புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய மாணிக்கவாசகன் கனடாவில் கைது”
Leave a Reply
You must be logged in to post a comment.
நீங்களே அங்கள் உறவுக்கு எமனாக இருந்தீர்கள்.. இப்போது அழிந்த பின்னும் புலம் பெயர் நாட்டில் உள்ள சிறு புல்லுருவுகள் மீண்டும் எமனாக வருகிறார்கள்.
நாங்களே எமக்கு எதிரி ஆகி விட்டோம்… அகதி எண்டு புலம் பெயர் நாட்டுக்கு வந்து என்ன செய்தீர்கள்? ஒரு கொஞ்ச காலம் பினோக்கி பாருங்கள்…
ஒரு நாடும் இப்போது இரக்கப்படுவதாய் இல்லை… ஏன்?
உதவி செய்யாட்டியும் பரவாஇல்லை உபத்திரவம் குடுக்க வேண்டாம் . அது உங்களுக்கே பொருந்தும்…..
போராட்டம் என்று நீங்கள் கூறிக்கொண்டு செய்யும் கூத்துகள் எல்லாம், எமது உறவுகளுக்கு எதிராகவே அமைந்துள்ளன.. வரலாறு அதை தான் கூறுகிறது….
தயவு செய்து, இனியும் உபத்திரவம் குடுக்க வேண்டாம், அடிச்ச பணத்தோடு சந்தோசமாக இருங்கள்.. ஒருவரும் கணக்கு கேக்க மாட்டம்..மிஞ்சிய தமிழராவது சந்தோசமாக இருக்கட்டும்.