மட்டக்களப்பு உறுகாமத்தில் கிரனைட் வெடித்ததில் மாணவர்களான சகோதரர்கள் இருவர் காயம்
Read Time:1 Minute, 13 Second
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பிரதேச்திலுள்ள உறுகாமம் பகுதியில் குளமொன்றுக்கு அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் கிரனைட் வெடித்துக் காயமடைந்துள்ளனர். அங்கிருந்த கல்லொன்றை தூக்கியபோது கிரனைட் வெடித்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க கூறியுள்ளார். நேற்றிரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் இதன்போது காயமடைந்த இரு சிறுவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. காயமடைந்தவர்கள் சகோதரர்கள் என்பதுடன் உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 மற்றும் 13 வயதுகளையுடையவர்களாவர். மீள்குடியேற்றம் இடம்பெற்ற கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Average Rating