ஈராக்கில் 50 பேர் கடத்தப்பட்டனர்
Read Time:45 Second
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பல்வேறு போக்குவரத்து கம்பெனிகளின் தொழிலாளர்கள் 50 பேரை போலீஸ் சீருடையில் ஆயுதம் தாங்கி வந்தவர்கள் கடத்தினார்கள். சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு போக்குவரத்து வசதியைச் செய்து தரும் கம்பெனிகள் ஒரு தெரு முழுவதும் உள்ளன.
கடத்தல்காரர்கள் அந்த தெருவில் உள்ள கம்பெனிகளுக்குச் சென்று 50 பேரை கடத்தினார்கள்.இவர்கள் என்ன நோக்கத்துக்காக கடத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.