சீனாவில் புயல் மழைக்கு 29 பேர் பலி
Read Time:1 Minute, 12 Second
சீனாவின் தென் பகுதியில் உள்ள பிïஜியன் மாநிலத்தில், பெய்த கனமழை, புயல் காரணமாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் 19 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. 22 பேர் வெள்ளத்தில் மூழ்கிச் செத்தனர்.
குவான்டாங்க் மாநிலத்தின் மெய்சல் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலியானார்கள். அங்கு 784 வீடுகள் இடிந்து விழுந்தன. 15 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் சேதம் அடைந்தன.
அடுத்த 10 நாட்களுக்குப் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளது.
மே மாத இறுதி வரை மழை வெள்ளத்துக்கு 59 பேர் பலியானார்கள். சீனா முழுவதும் 1 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 71 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. 8 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.