புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிசில் தஞ்சம்

Read Time:1 Minute, 13 Second

Escape.jpgபுலிகள் இயக்கத்தினரால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு, பாரிய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இளைஞர் ஒருவர், நேற்று முன்தினம் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

26 வயதுடைய புண்ணியமூர்த்தி விஜிதரன் என்பவரே இவ்வாறு தப்பி வந்து பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தவர் ஆவார். இவர் திருக்கோவில் பகுதியிலிருந்து பலவந்தமாகக் கடத்தப்பட்டு, புலிகளது கஞ்சிகுடிச்சாறு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அங்கு பலத்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இவரது சகோதரரான புண்ணியமூர்த்தி ரூபன் என்பவர் கடந்த மே மாதம் புலிகளால் கொலை செய்யப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 6 வது மாடியிலிருந்து குதித்து நடிகரின் மகள் தற்கொலை
Next post B.J.P ராகுல் மகாஜன் கைது