சுவிஸ் செல்ல முற்பட்ட யுவதி நீர்கொழும்பு சிறையில் மரணம்

Read Time:1 Minute, 38 Second

swissflag.gifநீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார். போலி கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி சுவிற்சர்லாந்திற்குச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வலிகாமம் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த சுகந்தினி (வயது 26) என்ற யுவதியே இவ்வாறு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி 31ம் திகதி கைது செய்யப்பட்ட இவர் சில மாதங்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்றிலிருந்து அங்குள்ள பல கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரு யுவதிகள் மயக்கமடைந்துள்ளார். வெளிநாட்டிற்கு போலி முகவர்கள் மூலம் செல்ல முற்படும் பலர், குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் மோசடித்தனமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post B.J.P ராகுல் மகாஜன் கைது
Next post வவுனியா வேப்பங்குளத்தில் கிளைமோர் தாக்குதல்