25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கத்தார்நாடு வழங்குகிறது
Read Time:1 Minute, 1 Second
அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் நாடு அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு போதுமான அளவு அரபி மொழி அறிவு இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது எனத்தீர்மானித்து உள்ளது. இதனால் அங்கு குடியேறியுள்ள பல இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் எனத்தெரிகிறது.
குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்கள் கத்தாரிலோ அல்லது வேறு எந்த நாட்டிலுமோ குற்றச்செயல்களுக்காக ஜெயில் தண்டனை பெற்று இருக்கக்கூடாது. நல்ல வாழ்க்கைத்தரம் உடையவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கஅந்த நாட்டு அரசு தீர்மானித்து உள்ளது.