பிந்திய செய்தி… நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி – 14பேர் படுகாயம்

Read Time:1 Minute, 35 Second

Woman.Sad..1jpg.jpgபிந்திய செய்தி… நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி – 14பேர் படுகாயம் – புலிகளின் நிர்வாகப்பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் கண்ணிவெடியில் சிக்கி மூன்று குழந்தைகள் உட்பட 10 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். நேற்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக் கின்றன. சம்பவ இடத்திலேயே 5 பெண்கள், மற்றும் 3 குழந்தைகள் உட்பட 10பேர் கொல்லப்ப ட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான உழவு இயந்திரத்தில் 20 பொதுமக்கள் சென்றதாக தெரிகிறது.

கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக் கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலில் படுகாயமடைந்தோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் மட்டக்க ளப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர.;

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பஹ்ரைனில் முதல் பெண் நீதிபதி
Next post காங்கோ நாட்டில் கப்பலில் தீ விபத்து: 100 பேர் கருகி சாவு