பிரபாகரனின் தாயார் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் எதுவும் தெரியாதென இந்தியத் தூதரகம் தெரிவிப்பு
Read Time:1 Minute, 2 Second
பிரபாகரனின் தாயார் பார்வதி இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தமக்கு எந்தவித தகவலும் தெரியாதென இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. பார்வதியின் மருத்துவ சிகிச்சைக்காக இந்திய அரசு 6மாதகால விசா வழங்கியிருந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஊடகங்கள் ஊடாக இத்தகவல் தெரியவந்ததாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து பார்வதிக்கு மலேசியா ஒரு மாதகால விசா வழங்கியுள்ளது. தற்போது அவர் மலேசியாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
Average Rating