உரிமம் பெற்ற வங்கிகளை வடக்கு கிழக்கில் திறக்க மத்தியவங்கி அனுமதி
உரிமம் பெற்ற வங்கிகள் பல வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார செயற்பாடுகளிற்கு துணைபுரிவதற்கு மிகுந்த ஈடுபாட்டினை காட்டிவருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி கொமர்ஷல் பாங்க் ஒப் சிலோன் பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி, சம்பத்வங்கி என்பன அக்கரைப்பற்று,களுவாஞ்சிக்குடி, கிளிநொச்சி, மல்லாவி, மானிப்பாய், மாங்குளம், மன்னார், பரந்தன், துணுக்காய் மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் அடுத்துவரும் ஒருசில மாதங்களில் கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன இதற்கு தேவையான அனுமதி மத்திய வங்கியினால் வழங்கப்பட்டள்ளன வடக்கு மற்றும் கிழக்க மாகாணங்களில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கம் உரிமம் பெற்ற வங்கிகளும் 2010ம் ஆண்டில் ரூ56 மில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் 2011ம் ஆண்டில் ரூ70 மில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Average Rating