மீள் தேர்தலின் பொருட்டு விரிவான பாதுகாப்பு
நாவலப்பிட்டி மற்றும் கும்புறுபிட்டி வாக்களிப்புப் பிரிவுகளுக்கான மீள் தேர்தலின் பொருட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கென பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 2000உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இவர்களுள் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார். சகல வாக்களிப்பு நிலையங்களிலும் ஆயுதமேந்திய ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். பாதுகாப்புப் படையினர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரை உள்ளிடக்கிய 800பேர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும் சாதாரண சட்டத்தை நிலைநாட்ட சுமார் 1200பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating