யாழ்ப்பாணத்தில் மூன்றுநாள் சர்வதேச கண்காட்சி
யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக வெளிநாட்டு கைத்தொழிலாளர்கள் பங்குகொள்ளும் மூன்றுநாள் சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது இருநூறுக்கும் அதிகமான கைத்தொழிலாளர்கள் இ;க்கண்காட்சியில் தமது காட்சியறைகளை திறந்துள்ளனர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியையும் அதனோடு கூடிய விளையாட்டரங்கையும் மையப்படுத்தி இக்கண்காட்சித்திடல் அமைக்கப்பட்டுள்ளது இக்கண்காட்சியை இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்த் நேற்றுகாலை 10.00மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் மூன்று நாட்களும் தொழில்சார் கருத்தரங்கு கலைநிகழ்ச்சிகள் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன யாழ்ப்பாணத்துக்கான உங்கள் நுழைவாயில் என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்வர்த்தக கண்காட்சி குடாநாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பெரும் பொருட்செலவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஏற்பாளர்கள் தெரிவித்துள்ளனர் இக்கண்காட்சியை யாழ்ப்பாணம் வர்த்தககைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மகாநாடுகள் சேவை அமைப்பம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன இந்த வர்த்தக கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலை 10.0மணிதொடக்கம் இரவு 7.00 மணிவரை இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating