ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கு உரியமுறையில் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் -ஜனாதிபதி தெரிவிப்பு
ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கு உரிய முறையில் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார் மக்கள் நாட்டுக்காக தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாகவும் பதிலுக்கு தாங்களும் எமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு அனைவரும் தயாராகவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சீர்குலைக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் புதியவர்கள் தமது கடன்களை உரியமுறையில் நிறைவேற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating