நோர்வே ஒஸ்லோவில் இலங்கை தூதரகத்தை தாக்கிய 8பேர் கைது
கடந்தவருடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றபோது அதனை நிறுத்தவேண்டும் என்று நோர்வே ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது 2009ம் அண்டு ஏப்ரல் 12ம் திகதி இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஆவேசத்தில் இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்தனர் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 8பேரை நோர்வே பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரசன்னா சற்குணம், அந்தோனி ஜோகானந்தன் தேவராஜ், கிருஷ்ணகுமார் தர்மலிங்கம், இன்பராஜா தேவராசா, சஜிந்தன் பார்வதிதாசன், விதுஷன் சுரேஷ், ஜெஸ்வந் புஷ்பராஜா, கௌதம் கருணாகரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர் இவர்களுக்கு எதிராக நோர்வே நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 8பேரில் ஒருவர் நோர்வேயில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர் என்பதும் குறிப்பிடதக்கது
Average Rating