அச்சுவேலியில் மாணவி ஒருவர் குத்திக்கொலை

Read Time:1 Minute, 44 Second

நேற்றுமுன்தினமிரவு வீட்டில் தனியாக இருந்த 15வயதான மாணவி ஒருவரை இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கடந்த  ஒருமாதகாலத்தில் அதிகரித்துள்ள இதுமாதிரியான தனியாக இருந்தபெண்கள் கொலைசெய்யப்படும் சம்பவத்தில் இது நாலாவது சம்பவம் என்பதும் குறிப்பிடதக்கது. கொல்லப்பட்டவர் பவித்திரன் கலைச்செல்வி என்றும் அவர் அத்தியடி மத்திய வித்தியாலய மாணவி என்றும் அறியப்படுகிறது. கொள்ளையடிப்பதற்காக வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்களே இக்கொலையை செய்ததாக நம்பப்படுகிறது இதேவேளை இலங்கையின் தென்பகுதிக்கு கல்விச்சுற்றுலாவுக்கு சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் விமலராஜா அபிதரன் என்னும் 16வயதான இந்த மாணவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவராவார் இவர் தனது அம்மா கல்வி கற்பிக்கும் சங்கானை சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களுடன் சேர்ந்து தென்னிலங்கைக்கு சுற்றுலா சென்றபோது பொலநறுவை பகுதியில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தில் குளிக்கும்போது மூழ்கி உயிரிழந்தார் என்றும் இப்போது இவரது உடல் பொலனறுவை மருத்துவமனையில் உள்ளது எனவும் அறியப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று கூடலாம்..
Next post ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கு உரியமுறையில் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் -ஜனாதிபதி தெரிவிப்பு