பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று கூடலாம்..
கடந்த பெப்ரவரி 8ம் திகதியிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று இடம்பெறவுள்ளது மார்ச் மாதம் 16ம் திகதி 17ம் திகதிகளில் நடத்த முதலாவது விசாரணை தள்ளிப்போடப்பட்டதை அடுத்து இன்று மீண்டும் கடற்படைத் தலைமையகத்தில் அவ்விசாரணைகள் தொடர்கின்றன இதற்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமைவகிப்பார் மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யு.எல்.தவுலகம மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் இந்த இராணுவ நீதிமன்றத்தின் ஏனைய அங்கத்தவர்களாக கலந்துக்கொள்ளவுள்ளதுடன் நீதிபதியாக ரியர் அட்மிரல் டபிள்யு.ஜே.எஸ். பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார் சரத் பொன்சேகா மீது அரசை கவிழ்க்க முயன்றதாக அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளும் உள்ளபோதும் அவர் இராணுவ பதவியில் இருந்தபோது இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் சாட்டப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பிந்திய செய்தியின்படி இவ்வழக்கு மே5ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Average Rating