புதிய பிரதமர் எதிர்வரும் புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்வார்..

Read Time:1 Minute, 38 Second

புதிய பிரதமர் எதிர்வரும் புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முன்னாள் பெருந்தோட்ட  அமைச்சர்  டி.எம்.ஜயரட்ன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதென தெரிவிக்கப்படுகிறது எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி ஜனாதிபதி தனது இரண்டாம் தவணைக்காக பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளும்வரையில் இந்த பிரதமர் பதவி நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது அதன் பின்னர் வேறொருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அவைத் தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில்ராஜபக்ஷ ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்காக தெரிவுசெய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது டி.எம்.ஜயரட்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்பதால் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோர்வே ஒஸ்லோவில் இலங்கை தூதரகத்தை தாக்கிய 8பேர் கைது
Next post காவல்துறை புலனாய்வு பிரிவு உயர்பதவிகளில் மாற்றம்..