இலங்கையில் அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே வலியுறுத்து
Read Time:1 Minute, 20 Second
இலங்கையில் அரசியல் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது இலங்கையில் தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலை வரவேற்கதக்கதென நோர்வே அறிவித்துள்ளது இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு அமோக வெற்றி கிட்டியுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன்ஸ் கார்டோர் தெரிவித்துள்ளார் கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் இடம்பெயர் மக்களுக்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுத்திட்டமொன்றை வழங்கும் முனைப்புகளுக்கு நோர்வே அரசாங்கத்தினால் ஒத்துழைப்பு வழங்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating