மின்னல் தாக்கம் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் -வளிமண்டலவியம் திணைக்களம்
மின்னல் தாக்கம் குறித்துமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது நாட்டின் பலபாகங்களிலும் இடிமின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. பதுளை இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட மி;ன்னல் தாக்கத்தினால் ஐந்துபேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் மேலும் மின்னல் தாக்கத்தினால் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மழைநேரங்களில் இடிமின்னல் ஏற்படும் நேரங்களிலும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது குறிப்பாக கையடக்க தொலைபேசி பாவனை இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடு மரநிழலில் ஒதுங்குதல் போன்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டள்ளது. பிற்பகல் அல்லது மாலை வேலைகளில் நாட்டின் அநேக பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என வழிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.
Average Rating