பொன்சேகாவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற ஜேவிபியின் கருத்து நகைப்புக்குரியது -ஐ.தே.கட்சி தெரிவிப்பு!

Read Time:1 Minute, 19 Second

ஜெனரல் பொன்சேகாவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற ஜே.விபியின் கோரிக்கை நகைப்புக்குரியதென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. கட்சி படுதோல்வியை தழுவியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். வேறும் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்ககூடிய அரசியல் பின்னணி தற்போது ஜே.வி.பிக்கு கிடையாதென அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவை எதிர்கட்சி தலைவர் பொறுப்பிற்கு அமர்த்துவது பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி
Next post ஜனாதிபதி 2வது பதவிப் பிரமாணம்வரை 38பேருடன் தற்காலிக அமைச்சரவை