யாழிலிருந்து சென்ற ஜேர்மன் பாதிரியார் விபத்தில் படுகாயம்..
Read Time:1 Minute, 7 Second
நேற்று பிற்பகல் புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன் நாட்டுப் பாதிரியார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இந்த வாகனம் புத்தளம் அநுராதபுரம் சாலையில் விபத்துக்குள்ளானது இதில் ஜேர்மன் பாதிரியார் தவிர மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் அவர்களில் இருவர் உள்ளூர் கத்தோலிக்க பாதிரியார்கள் என்றும் ஒருவர் வணக்கத்துக்குரிய சகோதரி என்றும் தெரிவிக்கப்படுகிறது ஜேர்மனியை சேர்ந்த பாதிரியாரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது அவர் இப்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating