வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 10கோடி ரூபா ஒதுக்கீடு
Read Time:58 Second
இடம்பெயர்ந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட 50மீனவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மீன்பிடிப்படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இவர்களுக்கு இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட வுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating