சுன்னாகம் சென்றிருந்த இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்..

Read Time:2 Minute, 29 Second

வன்னி இடைத்தங்கல் முகாமிலிருந்து உறவினர்களை பார்வையிடுவதற்காக சுன்னாகம் சென்றிருந்த இளம்யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உள்ளுர் நபர்கள் இருவரே தொடர்பு பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஊர் இளைஞர்களால் தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட இவர்கள் இருவரும் பலத்த அடிஉதைகள் காரணமாக தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி யுவதி வன்னி முகாமிலிருந்து சுன்னாகத்திலுள்ள தனது மாமனார் வீட்டுக்கு பேருந்தில்  சென்றுள்ளார். குறித்த பேருந்தில் சென்றுள்ளார் குறித்த பேருந்து நிலையத்தில் இறங்கி பாதை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த இவரை குடும்பஸ்தர்களான இருவர் பாதை காட்டுவதாக கூறி கூட்டிச்சென்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர். இரவு முழுவதும் தடுத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய நிலையில் நேற்று காலையில் யுவதி தப்பிச்சென்று அருகில் உள்ள பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கியதையடுத்து ஊர் இளைஞர்கள் திரண்டு தேடி முதலாவது நபரை பிடித்தனர். இளைஞர்களின் அடிஉதை காரணமாக அவர் மற்றையவர்களையும் காட்டிக் கொடுத்ததன் காரணமாக வவுனியாவிற்கு தப்பிச்செல்ல தயாராகவிருந்த அடுத்த நபரும் பிடிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் பொதுமக்களால் மிகமோசமாக தாக்கப்பட்ட நிலையில் சுன்னாகம் காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டனர் தற்பொழுது குறித்த யுவதியும் காயமடைந்த இரு குற்றவாளிகளும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 10கோடி ரூபா ஒதுக்கீடு
Next post மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் பிள்ளைபிடி..