மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் பிள்ளைபிடி..

Read Time:2 Minute, 15 Second

யாழ்ப்பாணத்தில் பிள்ளைபிடிக்காரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்புவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டள்ளார். துரைசிங்கம் அஜித்குமார் எனும் 13வயதுடைய இந்த மாணவன் தனது முகாமிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சமயம் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் எனினும் சிறுவனும் தாயும் கத்திக்குழறியதை அடுத்து அருகிலுள்ள படைமுகாம் ஒன்றிற்கு அருகில் சிறுவனை அரைகுறை மயக்கமான நிலையில் வானிலிருந்து தள்ளிவிட்டு கடத்தலாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி படையினரால் மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் அப்பகுதி இடம்பெயர்ந்த மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவல்துறையில் அவர்கள் முறைப்பாடு செய்ய முற்பட்ட பொழுதிலும் மானிப்பாய் காவல்துறையினர் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்த போது வாகனத்தில் மேலும் இரு சிறுவர்கள் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளைத்துணியால் மூடி படுக்க வைக்கப் பட்டிருந்ததனை தமது மகன் கண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுன்னாகம் சென்றிருந்த இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்..
Next post 35பேர் கொண்ட புதிய அமைச்சரவை டி.எம்.ஜயரட்ண புதிய பிரதமர்..