நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானையில் திறப்பு
Read Time:1 Minute, 21 Second
நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானை பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவையை மேலும் செயற் திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் பாதுகாப்புச்செயலாளர் கோதாபயா ராஜபக்ஷவின் ஆலோசனைக்கேஏற்ப பொலிஸ் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த கல்லூரியை திறக்கவுள்ளதுடன், திறந்து வைக்கும் இக்கல்லூரி ஊடாக பொலிஸ் சேவையில் உள்ளவர்களுக்கு அவர்களின் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுவும் வகை செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 26ம் திகதிமுதல் சிரேஷ்ட துப்பறியூம் பாடநெறி மற்றும் கணிஷ்ட துப்பறியூம் பாடநெறியை இக்கல்லூரி ஊடாக மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating