இலங்கையின் பிரதமராக ஜெயரத்னே பதவியேற்றார்
Read Time:45 Second
இலங்கையின் புதிய பிரதமராக ஜெயரத்னே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில், பார்லிமென்ட் தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில், அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு மொத்தமுள்ள 225 இடங்களில், 144 இடங்கள் கிடைத்தன.இதையடுத்து, அக்கட்சியின் மூத்ததலைவரான ஜெயரத்னே, பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருக்கு, அதிபர் ராஜபக்ஷே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையின் புதிய பார்லிமென்ட் இன்று கூடுகிறது.
Average Rating