ருக்மன் சேனாநாயக்க கட்சித் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார்
Read Time:1 Minute, 10 Second
ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் ருக்மன் சேனாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரன் என்பது குறிப்பிடதக்கது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில் ருக்மனின் பெயர் உள்ளடக்கப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படவில்லை. தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படாத காரணத்தினால் ருக்மன் சேனாநாயக்க பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது எவ்வாறெனினும் பதவி விலகல் குறித்து எதுவும் தெரியாதென ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
Average Rating