ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

Read Time:1 Minute, 31 Second

ஊடகவியலாளர் படுகொலைச் சம்பவங்களுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் படுகொலை சம்பவங்களுக்கு தண்டணை வழங்காத நாடுகளின் வரிசையில் ஈராக் முன்னிலை வகிக்கிறது என நியூயோர்க்கை மையமாக கொண்டியங்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஊடகவியலாளர்கள்மீது அதிகளவு தாக்குதல் நடத்தப்படும் நாடுகளின் வரிசையில் பிலிப்பைன்சும், சோமாலியாவும் முன்னிலையிலுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக மோசமான வன்முறை இடம்பெறும் நாடுகள் வரிசையில் ரஸ்யா மற்றும் மெக்சிக்கோ முன்னிலையிலுள்ளன. 2003ம் ஆண்டு ஈராக்கில் 88ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டபோதிலும் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. இலங்கையின் யுத்தகாலத்தில் 10ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளுக்க தண்டனை வழங்கப்படவில்லையென்று ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரதும் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்-ரணில்
Next post விடுதலைப்புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் கைது