விடுதலைப்புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் கைது
Read Time:1 Minute, 20 Second
விடுதலைப்பலிகளின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட சில வெளிநாட்டு முக்கியஸ்தர்களை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலேசியா பாதுகாப்பு பிரிவினரின் செயற்திறனை இலங்கைப் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு முதல் இந்தவருடம் மார்ச் மாதம் வரையில் 599வெளிநாட்டு பிரஜைகளை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் விஷேட கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating