விரைவில் அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் -அமெரிக்கா வலியுறுத்து
Read Time:1 Minute, 14 Second
விரைவில் அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து இன ஐக்கியத்தை வலுப்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தி மீண்டும் போராட்டங்கள் வெடிக்காத வகையில் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணிகளை களைந்தெறிய வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Average Rating