யாழில் பாலியல் வல்லுறவு கைதான சந்தேகநபர் கைவிலங்கை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளார்
மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக கைதான பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் இவரை தேடிக் கண்டுப் பிடிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர் வவுனியாவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்யுவதி ஒருவர் தமது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இரவு 7.00மணியளவில் கட்டுடை பஸ்தரிப்பு நிலையத்தில் நின்றிருந்தார் அப்போது அங்கு வந்த இருவர் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் எனக்கூறி அந்த யுவதியை அழைத்துச்சென்று வீடொன்றில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது இந்த இருவரையும் பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டவேளை ஒருவர் நஞ்சருந்தி தற்கொலைசெய்துக்கொள்ள முயன்றதாகவும் மற்றவர் பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்டதகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்கள் இருவரும் யாழ்போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இவர்களில் நாகராஜா பிரதீபன் (வயது30) என்ற சந்தேக நபர் நேற்று அதிகாலை 2.00மணியளவில் கைவிலங்கினை உடைத்விட்டு வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர் இவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் யாழ்பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் இதேவேளை சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் க.அரியநாயகம் உத்தரவிட்டிருந்தார்.
Average Rating