பாலவர்ணம் சிவகுமார் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் -நீதிமன்றம் அறிவித்துள்ளது
Read Time:1 Minute, 16 Second
பம்பலப்பிட்டிய பகுதியில் சித்தசுயாதீனமற்ற பாலவர்ணம் சிவகுமார் என்ற இளைஞர் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சந்தேக நபர்கள் குறித்த நபரை கடலில் மூழ்கடிக்கச் செய்துள்ளதாக நீதவான் சுட்டிக் காட்டியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் ஏனைய சாட்சிகளின் அடிப்படையில் இது ஓர் படுகொலை சம்பவம் என நிரூபணமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபருடன் காவல்துறையினர் கலந்தாலோசிக்க வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார். தடிகளை எடுத்துக் கொண்டு குறித்த நபரை மிரட்டிய செயல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Average Rating