புலிகளின் சர்வதேசவலையமைப்பு இயங்கிவருவதாக இலங்கை குற்றச்சாட்டு
Read Time:1 Minute, 26 Second
கடந்தவருடம் விடுதலைப்பலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் சர்வதேச வலயமைப்பின் நடவடிக்கைகள் தொடர்வதாக இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது விடுதலைப்பலிகள் அமைப்புக்கு சொந்தமான பல கப்பல்கள் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரேஸிலுக்கான இலங்கை தூதுவர் ஏ.எம்.ஜெ.சாதீக் குறிப்பிட்டார் விடுதலைப்புலிகளின் மொத்த வெளிசாட்டுச் சொத்துக்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் முதல் 5பில்லியன் அமெரிக்க டொலர் என கணக்கிட முடியும் என அவர் கூறினார். இந்நிலையில் விடுதலைப்புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேசநாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஏ.எம்.ஜெ.சாதீக் குறிப்பிட்டார் இதன்மூலம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Average Rating