இலங்கையிலிருந்து 75பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு சுற்றிவளைப்பு
Read Time:1 Minute, 10 Second
இலங்கையிலிருந்து 75பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகை இன்றுஅதிகாலை மலேசியா கடலில் வைத்துப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தியும் அவர்கள் மறுப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. தாம் மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பபடுவோம் என்ற காரணத்தினால் இவர்கள் தரையிறங்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களை ஏதிலிகளாக ஏற்று கொள்ளக்கூடிய ஏதாவது ஒரு நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தோனேஷிய மெராக் துறைமுகத்தில் ஏற்பட்ட நிலை இவர்களுக்கும் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.
Average Rating