போலி ஆவணங்களை காண்பித்து யாழ் செல்ல முயன்ற போது கைதான பிரான்ஸ் பிரஜை விடுதலை
Read Time:1 Minute, 1 Second
யாழ் குடாநாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தாரென்ற குற்றச்சாட்டின்பேரில் வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு பிரஜை நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜை வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்படும் முன் அனுமதிப்பத்திரம் என போலி ஆவணமொன்றை காண்பித்து யாழ் குடாநாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
Average Rating