கெஹெலியவிற்கு ஊடகஅமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது

Read Time:1 Minute, 44 Second

அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு ஊடக அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் கெஹெலியவிற்கு ஊடக அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும் அமைச்சுப் பொறுப்பொன்றை வழங்குவது குறித்து இதுவரையில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை நடத்தி வருகின்ற காரணத்தினால் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் வழங்கப்படவில்லை கடந்த அரசாங்கத்தில் கெஹெலிய ரம்புக்வெல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் கடமையாற்றி வந்தது குறிப்பிடதக்கது. இதேவேளை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன எவ்வாறெனினும் ஊடகத்துறை பிரதியமைச்சர் பதவியினை மேர்வின் சில்வா நேற்று பதவியேற்றுக் கொண்டது சுட்டிக் காட்டதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதியிடம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள்..
Next post பதவிகளை கோராது நாட்டின் நலனுக்காக செயற்படுவேன் -ரோஹித்த போகொல்லாகம